Tricycle Donation to Physically Challenged /விபத்தில் கால்கள் செயல் இழந்தவருக்கு ட்ரை சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

பந்தல் அமைப்பாளர் திருப்பரங்குன்றம் – நிளையூர் கிராமம் ஓம்சக்தி நகரை சேர்ந்த திரு. கோவிந்தராஜ் அவர்கள் பணியின் போது கட்டிடத்தின் மேலே இருந்து தவறுதலாக கீழே விழுந்ததில் அவரின் முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம்பட்டு நடக்க இயலாமல் போனது.தற்போது இவர் தன் மனைவியின் கவனிப்பில் மட்டுமே வாழ்ந்து வருகிறார். இவர் மனைவி கட்டிட கூலித்தொழிலாளி.
இவரின் மனைவி வேலைக்கு சென்ற பின் இவருக்கு உதவிட யாரும் இல்லாத சூழலில் தவித்து வந்துள்ளார். இந்த செய்தி அறிந்த அப்பகுதியை சேர்ந்த திரு. சரவணன்(பத்திரிகை நிருபர்) அவர்கள் நமது திருநகர் பக்கம் குழுவை அணுகினார்.
இதனை அடுத்து இவர் சுயமாக நகர்ந்து செல்ல மாற்றுத் திறனாளி மூன்று சக்கர சைக்கிள் ஒன்றை வழங்கிட நிதி திரட்டும் பணியினை தொடங்கினோம்.

இதனை அறிந்த மாமதுரை நண்பர்கள் குழுவினர் திரு. ஜெரால்டு வில்சன், திரு. கருமணி மற்றும் நண்பர்கள் இதற்கு நிதியுதவி செய்திட முன்வந்தனர்.
பின் ஞாயிறு10.10.2021 அன்று பயனாளிக்கு மூன்று சக்கர மாற்றுத்திறனாளி சைக்கிள் வழங்கப்பட்டது.
மாமதுரை நண்பர்கள் குழு மற்றும் ஓம்சக்தி நகர் சரவணன் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a reply